தேவையான பொருட்கள்
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் கலர் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றி பூந்தியை பொரித்து எடுக்கவும். பிறகு வேறு ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போட்டு தாளித்து பூந்தியில் போட்டு கிளறவும். இவை மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு அரைத்தெடுக்கவும். வாணலியில் பூந்தியை போட்டு லேசான சூட்டில் வறுக்கவும். பின் இதில் சீனி பாகை ஊற்றி உருண்டை பிடிக்கவும். சுவையான பூந்தி லட்டு ரெடி.
Similar Posts : How to Make Pudding, How to make the Mushroom chops, பருப்பு ரசப் பொடி, தேங்காய் சட்னி, சேனைக்கிழங்கு மிக்சர், See Also:லட்டு சமையல்