பரிகாரம்:
மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும், தாழ்விற்க்கும் கிரக பலன்களே காரணம். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு.
அவரவர் செய்யக் கூடிய பரிகார பூஜை வழிபாடுகள், தான தர்மங்கள், நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது “பரிகார பூஜைகள் ஆகும்.
திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம் போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.
ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,பேரையூர், திருப்பாம்புரம் மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை குறைக்கலாம். துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு ராகு காலத்தில் செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.
Similar Posts : திருமண தடை பரிகாரம், திருமணத் தடை பரிகாரம், குளியலறை மற்றும் கழிவறை வாஸ்து பரிகாரம், கடன்கள் தீர பரிகாரம், புத்திர தோஷ பரிகாரம், See Also:திருமணம் தடை பரிகாரம்
Comments