SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை
  • 2020-10-06 00:00:00
  • Shasunder

திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை

Share this post

f ✓ X in ↗ ⧉

திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை

சூத முனிவரே! விஷ்ணுமூர்த்திக்குச் சிவபெருமான் சக்கிராயுதம் கொடுத்தார் என்று கிருஷ்ணமூர்த்தி, தோத்திரஞ் செய்ததாகச் சொன்னீர்களே! தாங்கள் யாவும் அறிந்தவராகையால் அந்தச் சரிதத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம்! என்றார்கள் சவுனகாதி முனிவர்கள். சூதமுனிவர் கூறலானார். முனிவர்களே! ஒரு காலத்தில் பலசாலிகளான அரக்கர்கள் அதிகமாகி உலகங்களைப் பீடித்துத் தர்ம நாசம் செய்து வந்தார்கள். அதனால் தேவர்கள் அனைவரும் சங்கடப்பட்டு விஷ்ணுமூர்த்தியை அடைந்து பரமாத்மாவே! எங்கள் விஷயத்தில் தயை வைக்க வேண்டும். தைத்தியர்களால் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம். நாங்கள் எங்கே போவோம்? காத்தல் கடவுளான தங்களையடைந்தோம்! என்று பிரார்த்தித்தார்கள். திருமால் அவர்களை நோக்கி, அமரர்களே! அஞ்சாதீர்கள் நான் சிவபெருமானை ஆராதித்து அவரருளால் உங்களைக் காப்பேன் பகைவர்கள் பலவான்களாயிருப்பதால் பிரயத்தனம் செய்து வெல்ல வேண்டியிருக்கிறது. அதற்காகவே சிவாராதனை செய்கிறேன் என்றார். தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து தங்கள் இருப்பிடங்களை அடைந்தார்கள்.
 
அதன்பிறகு விஷ்ணு கைலாயமலைக்குச் சென்று சிவபெருமானைக்குறித்துத் தவஞ்செய்யக் கருதி ஹோமகுண்டம் அமைத்து யாகம் வளர்த்தி. பார்த்திவ பூஜாவிதானமான பலவித ஸ்தோத்திரங்களாலும் மந்திரங்களாலும் சேவித்து மானஸ ஸரஸிலிருக்கும் தாமரை மலர்களால் பூஜித்து பத்மாசனத்தில் வீற்றிருந்து யோக நிலையில் இருந்தார். அவர் அநேக காலம் பூஜை இயற்றியும் சிவபெருமான் காட்சியளிக்காததால் திருமால் கடின தவத்தையும் சிவபூஜையையும் மேற்கொண்டு பலகாலம் செய்து வந்தார். அப்போதும் சிவபெருமான் தோன்றாமல் இருக்கவே அவரது ஆயிரம் திருநாமங்களையும் தியானித்து ஆயிரங்கமலங்களால் அர்ச்சனை செய்யச் சங்கற்பம் செய்து ஆயிரம் தாமரைகளைச் சேகரித்து வந்து ஒவ்வொரு திருநாமத்துக்கு ஒவ்வொரு மலராக அர்ச்சித்து வந்தார். அவரது பக்தியைச் சிவபெருமான் பரீட்சிக்க விரும்பிக் கடைசியில் ஒரு திருநாமத்துக்கு ஒரு மலர் குறையும்படிச் செய்தார். அதனால் திருமால் தம் சிவ பூஜா நியமத்துக்கு குறைபாடு ஏற்படுவதைச் சகிக்காமல் எனது கண் தாமரை மலரேயாகும் இதனாலேயே என் பூஜையை முடிப்பேன் என்று அதனைப் பறிக்கத் தொடங்கினார். அப்போ சிவபெருமான் அவர் முன்பு காட்சியளித்து விஷ்ணுவே! உன் கண்ணைப் பறிக்கவேண்டாம். உன் பக்திக்கு மகிழ்ந்தேன் வேண்டியவரம் கேட்டால் தருகிறேன். உனக்குக் கொடுக்கக் கூடாதது எதுவுமில்லை என்றார். அதற்கு மகா விஷ்ணு சங்கரா! நீர் அறியாதது யாதுமில்லை. உலகங்கள் தைத்தயர்களால் துன்புறுகின்றன. யாவரும் சுகமடைவதற்கும் தைத்ய சங்காரம் செய்வதற்கும் தக்க ஆயுதம் எதுவும் என் கையில் இல்லை. எனவே உம்மைச் சரணடைந்தேன்! என்று கூறித்துதித்தார் சிவபெருமான் விஷ்ணுவுக்கு இரங்கி சுதர்சனம் என்ற சக்கரா யுதத்தைக் கொடுத்தருளினார், அதைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு
 
கமலாநாம் ஸஹஸ்ரந்து ஹ்ருதமே கங்கரேணச
நஞ்ஞானு விஷ்ணு நாதச்ச மாயாரணமத்புதம்
ந்யுநந்தச் சாபிதத்ஜ் ஞாத்வா நேத்ரமேக முதாஹ்ருதம்
தந்தீருஷ்ட் வாசப்ரஸ ந்நோ பூச்சரங்கரஸ் ஸர்வது க்கஹா
தைத் யாந்ஹந்துங்கதந்தேவ ஹ்யாயு தந்தப் ப்ரவர்ததே
கிங்க ரோமிக் வகச்சாமி ஸரணந்த்வா முபாகத
இத்யுக்த்வாச நமஸ்க்ருத்ய ஸிவாய பரமாத்மநே
ஸ்திதஸ்சை வாக்ர தோ தேவ ஸ்வயஞ்சஸுõரபீடித
ததா தஸ்மைஸ்வயம் ஸ்ம்யு சக்ரஞ் சதத்தவாந்ப்ரபு
தேஸ நவ பீடிதே விஷ்ணு தைத்யாம்ஸ்ச பலவத் தராந்
 
சிவபெருமானிடம் உத்திரவு பெற்றுச் சகல தைத்தியர்களையும் சங்காரம் செய்தார். 
இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும் அவரைச் சவுனகாதி முனிவர்கள் வணங்கி வியாசரின் சீடரே! விஷ்ணு மூர்த்தி சிவபெருமானைப் பூஜித்த சஹஸ்ரநாமங்கள் யாவை? எந்த சஹஸ்ர நாம பூஜையால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து விஷ்ணுவுக்குச் சக்கராயுகத்தை அனுக்கிரகித்தாரோ, அந்தச் சஹஸ்ரநாமத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள் சூத முனிவர் அதைக் கூறலானார்.


Similar Posts : திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை,

See Also:திருமால் சக்கிராயுதம் கதை

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 103
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 203
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 47
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Why Theertham
Why Theertham
2019-10-06 00:00:00
Why There Are Many Gods
Why there are many Gods
2019-10-06 00:00:00
Why Apply Tilak
Why apply Tilak
2019-10-06 00:00:00
Why To Sit In Floor
Why to sit in Floor
2019-10-06 00:00:00
Why Touch Feet
Why Touch Feet
2019-10-06 00:00:00
Why Triveni River
Why Triveni River
2019-10-06 00:00:00
Why Use Turmeric
Why Use Turmeric
2019-10-06 00:00:00
Why Wear Anklets
Why wear Anklets
2019-10-06 00:00:00
Why Wear Bangles
Why wear Bangles
2019-10-06 00:00:00
Why Women Stay Away During Menstrual
Why Women Stay away during Menstrual
2019-10-06 00:00:00
  • 216
  • Abishegam
  • Advice
  • Aikiri Nandhini
  • america
  • Astrological predictions
  • astrology software
  • astrology-match-making-chart
  • Authors
  • Beef Chili Fry
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • chinese
  • Hinduism
  • japanese
  • Mangal Singh
  • medicine
  • star
  • stress
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com