சித்தர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், சித்தர்கள் மீது ஈர்ப்புக் கொண்ட நண்பர்களுக்கும் இந்த புத்தகத்தை காணிக்கையாக சமர்பிக்கிறேன் இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் கீழ்கண்டவைகளின் தொகுப்புகள். நான் படித்து திரட்டிய தகவல்கள் கல்வெட்டு சான்றுகளில் கிடைத்த தகவல்கள் இணையத்தின் வாயிலாக சேகரிகப்பட்ட தகவல்கள் சித்தர்களைப் பற்றி ஒரு தனி மனிதன் மட்டுமே ஆராய்ந்து சொல்லிவிட முடியாது. அது பலரின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும். உலகில் பல மூலைகளில், பல வடிவங்களில் சிதறிக் கிடக்கும் தகவல்களை ஒன்றிணைப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆதலால் என்னால் முடிந்த வரை, மிகச் சரியான தகவல்களை தர முயற்சிக்கிறேன். அதற்கு இந்த புத்தகம் பல பதிப்புகளை தாண்ட வேண்டும். இதற்கு உங்களின் உதவி அவசியம் தேவை. படிக்கும் பொழுது நீங்கள் காணும் சொற்பொருள் மற்றும் எழுத்துப் பிழைகளை எனக்கு தெரிவித்தால் அதை உடனே அவசியம் திருத்தி விடுவேன். தமிழ் முருகனுக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இந்த இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது? இதை வாசிப்பவர்களில், கோடியில் ஒருவராயினும் பயன் அடைவார் எனில் இந்தத் தொண்டு பயன் தந்தது என எல்லாம் வல்ல இறைவனது கருணையை நினைத்து மனம் நிறைவு கொள்வேன்.